Hai Guys,


I am mirroring this site through www.maheshwaran.net as I learnt that my site is unavailable in Middle East.

Next... as mentioned in one of my previous blogs I am getting married this Nov 30th and would love to share my marriage happenings with you all via my wedding site. I need your wishes for a successful marriage life...

Last but not the least, if you found this pop-up window not closing, just drag it out, escape to next page through anylink, because there is a javascript conflict between this pop-up close button and news scroller.

Love and Regards,

Maheshwaran. I

Life is beautiful... Live it... Love it... Enjoy it..!!!
You're here : Home arrow MamBlogs

Show latest blog entries
Pathikichu - Kumudam Series - Episode 29
(Monday, 22 September 2008) Written by Meera
சினிமாவைப் பற்றிய புள்ளி விவரங்களை நுனிநாக்கில் வைத்துக்கொண்டு வி.ஐ.பி.களோடு கலந்துரையாடிக் கொண்டிருக்கும் முற்போக்குப் பெண்மணிக்கும், இளமையில் பிரபலமாகி வேறு தேசத்தில் மருமகளாகிப் போன கையோடு வீடு திரும்பிய புதுமைப் பெண்ணுக்கும் ஏற்பட்ட திடீர் நட்பு பற்றிதான் கோலிவுட் முழுக்க பேச்சு. ஏறக்குறைய பளிச் சிரிப்புதான் இருவருக்குமே அடையாளம். இந்த சேர்ந்த சிரிப்புகளை இப்போதெல்லாம் ஸ்டார் ஹோட்டல், பார்ட்டி டிஸ்கொத்தே என்று இளமை துள்ளும் இடங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. சமீபத்தில் ஒரு நட்சத்திர ஃபங்ஷனில் உற்சாக மூடில் இருந்த இருதோழிகளும் அடித்த லூட்டியை வந்திருந்த அத்தனை பேரும் கிக்கோடும் கிளாமரும் ஏற பார்த்து, பரவசப்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் உற்சாகம் ஓவராகி இரு தோழிகளும் கட்டியணைத்து முத்தமழை பொழிய ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் இருவரையும் பிரித்து ஒரு வழியாக பக்கத்து அறையில் விட்டு வந்து பார்ட்டியை கன்டினியூ செய்திருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து தோழிகள் இருவரின் நிலையைத் தெரிந்துகொள்ள அறைக்கதவைத் திறந்திருக்கிறார் உடன்வந்த தோழி. அவ்வளவுதான், பகீரடித்துத் திரும்பியிருக்கிறார். அறைக்குள் இரு தோழிகளும் முகத்தோடு முகம் இழைய சாரைப் பாம்புகளாய் பின்னிப் பிணைந்து ஷோபாவில் புரண்டிருக்கிறார்கள். கூப்பிட வந்த பெண் வியர்த்துப்போய் சைலண்டாக கதவை அடைத்துவிட்டு அப்படியே திரும்பிவிட்டார். நீண்டநேரம் கழித்து பார்ட்டி கலைந்தபின்னே இருவரும் பிரிந்து சென்றிருக்கிறார்கள். இவர்களின் இந்தப் பழக்கம் வீடு வரை வந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான லேட்டஸ்ட் தகவல்.. -பைனாகுலர் பையன் விடை: சுஹாஸினி, சொர்ணமால்யா
[ Back ]
Pathikichu - Kumudam Series - Episode 28
(Sunday, 07 September 2008) Written by Meera
இந்த இளைஞரின் இசைக்கு மயங்காத வர்களே கிடையாது. ஆனால், அந்த இளம் இசையமைப் பாளரோ மதுவில்மயங்கிக் கிடப்பதைத்தான் விரும்பு கிறாராம். காரணம், தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பிரச்னை கள்தானாம். இளமை இசை உலகின் அடையாளமாக அறியப்படும் அந்த இசையமைப்பாளர், சமீபகாலமாக மதுவை அதிகம் நாட ஆரம்பித்திருக்கிறாராம். தன் இசையில் பாடவரும் இளம் பாடகிகளின் நட்பு விஷயத்திலும் இவருடைய ஸ்டைல் மாறிவிட்டதாம். இளம் பாடகிகளுடன் அதிகம் நட்புப் பாராட்டுகிறாராம். இதனால் இரவு பகல் தெரியாமல் இவரது நட்பு ராஜ்ஜியம் களைகட்டுகிறதாம். சமீபத்தில் கூட வீட்டில் நடந்த விழா ஒன்றிற்கு மாலை இரண்டு மணி வரை இளம் இசையமைப்பாளர் வரவே இல்லையாம் முந்தையநாள் நட்புப் பாராட்டியதன் விளைவாக சரியான தூக்கத்தில் இருந்தாராம். கடைசியில் ஒரு வழியாக தாமதமாக வந்து சேர, அவரது வீட்டில் அனைவருக்கும் வருத்தமாம். தமிழ் சினிமாவின் எதிர்கால இசை ஹீரோ இப்படி தடம் மாறிப் போகக் காரணம், தனிப்பட்ட சோகமும் அதனால் ஏற்பட்ட `பின்னணி' இசைக் குயில்களின் நட்பும்தான் என முணுமுணுக்கிறது கோலிவுட் வட்டாரம்..  விடை: யுவன் ஷங்கர் ராஜா (?)
[ Back ]
Pathikichu - Kumudam Series - Episode 27
(Friday, 22 August 2008) Written by Meera
ராஜா போன்ற `வல்லிய' ஏவுகணை நடிகரும், முத்து போன்ற அழகுள்ள நடிகையும் முன்பொரு காலத்தில் இணைந்து நடித்தார்கள். பிறகு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. தற்போது இருவரும் இனிக்கும் படத்தில் ஜோடி சேர, ப்ரியம் மீண்டும் ராஜயோகத்தில் ஆரம்பத்திருக்கிறது. அடடா நாம இவ்வளவு நாட்களாக பிரிந்திருந்தோமே என்று இருவரும் ஆதங்கப் பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் நடிகர் தன்னுடைய ஃபேவரிட் வெளிநாட்டு கார் ஒன்றை வாங்க, நடிகைக்கு ஏக உற்சாகம். தங்களது நெருங்கிய நட்பின் அடையாளமாக அந்த சிவப்பு காரில் `நீயும் நானும்தான் முதன்முதலாக அமரவேண்டும். போவோமோ ஊர்கோலம்' என்று நடிகரி டம் சிணுங்கினாராம். இதனால் `இளகி' போன நடிகர் அந்த காரை ஷூட்டிங் நடக்கும் லொகேஷனுக்கே கொண்டு வந்துவிட்டாராம். இருவரும் ஜோடியாக அந்த காரில் ஜாலியாக ரவுண்ட் அடித்திருக்கிறார்கள். இப்போதும் அதில்தான் அவர்களின் பயணம். `குசேலன்' படத்தைப் பார்க்கச் சென்ற இந்த ஜோடியைப் பார்த்து, அந்தத் திரையரங்கில் பரபரப்பு ஏற்பட, இந்த காரில் ஏறிதான் இந்த ஜோடி தப்பித்ததாம். இப்படி நட்பு மேலும் மேலும் இறுக, மனமும் இணைய நட்பின் பரிசாக `இந்த சிவப்பு வெளிநாட்டு காரை நீ ஏன் எனக்கு பரிசாக கொடுக்கக் கூடாது' என நடிகை நடிகரிடம் கேட்டாராம். நடிகரும் தன்னுடைய காஸ்ட்லி காரை அன்பின் பரிசாக கொடுத்துவிடலாமா, அப்படி கொடுத்தால் ஏதாவது கிசுகிசு கிளம்புமா' என தீவிர யோசனையில் இருக்கிறாராம். அன்று முல்லைக்குத் தேர். இன்று காதலுக்கு கார். அடடா!. விடை: ‘பிருத்வி' ஏவுகனை ராஜா - பிருத்விராஜ், அழகான முத்து - முத்தழகி - பிரியாமணி, இவர்கள் முன்பே நடித்த படங்கள் - சத்யம் & திரைக்கதா (இரண்டுமே மலையாளம்)... இப்போது நடித்துக்கொண்டு இருப்பது - நினைத்தாலே இனிக்கும் (மலையாள க்ளாஸ்மேட்ஸ் படத்தின் ரீமேக்)
[ Back ]
Pathikichu - Kumudam Series (Episode 26)
(Saturday, 09 August 2008) Written by Meera
ஒரு அழகான தேன் கூட்டை `கறுப்பு வண்டு' கலைத்த வேதனைக் கதை. `மன்மதராசா'வுக்கு மனைவி மீது கொள்ளை ப்ரியம். காரணம், அவர் வந்த பிறகுதான் இவரது இசை வாழ்க்கை சுறுசுறுப்பானது. சீரியல்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தவரை `உன்னால் சினிமாவிலும் சாதிக்க முடியும்' என்று நம்பிக்கை ஊட்டினார். மனைவி தந்த உற்சாகப்படியே கோடம்பாக்கமும் திரும்பிப் பார்த்தது. வாய்ப்புகள் வந்தன. லட்சங்கள் சுலபமாகப் புரள ஆரம்பித்தன. வீடு, ரிக்கார்டிங் தியேட்டர் என்று சொத்துக்களையெல்லாம் மனைவி பெயரிலேயே வாங்கினார். `என் வீட்டு மகாலட்சுமி அவள்' என்று பெருமை பொங்க எல்லோரிடமும் சொல்லுவார். அந்த இளம் அம்மா உண்மையிலேயே மகாலட்சுமி போல அழகாக இருப்பார். மகனும், மகளும் அப்பாவின் வளர்ச்சியைக் கண்டு ரொம்பவும் ஆனந்தமடைந்தார்கள். எல்லாம் நேற்றைய கதை! சிலப்பதிகார கதை போல வந்தாள் கறுப்பு மாதவி! இசையமைப்பாளரின் மனைவி எவ்வளவு லட்சணமோ, சிவப்போ அதற்கு நேர் மாதிரி! பாண்டிச்சேரியிலிருந்து பாடுவதற்கு சான்ஸ் கேட்டுதான் ஸ்டூடியோவுக்குள் நுழைந்தார். அப்புறம் இரவுகளில் போன் போட்டு ``சார் என் குரல் புடிச்சிருக்கா? நாளைக்கு இன்னும் நல்லா பாடறேன். நீங்க தான் சார், எனக்கு குரு, தெய்வம் எல்லாம்'' என்கிற அளவில் நூல் விட்டிருக்கிறார். வழக்கமாக சான்ஸ் கேட்டு வருபவர்களின் ஆர்வக் கோளாறாகத்தான் இந்த போன் உரையாடல்களை அழகு மனைவி நினைத்திருக்கிறார். ஆனால் `இவர் தன் குடும்பத்தையே காலி பண்ண வந்த கோடரி' என்று பாவம், அந்த அப்பாவிப் பெண்மணி அப்போது எண்ணியிருக்க வாய்ப்பில்லை. மாதங்கள் உருள, பாண்டிப் பெண், சென்னையிலேயே குடிவந்துவிட்டார். சந்திப்புகள் தொடர்ந்தன. கணவர் ரிக்கார்டிங், ரிக்கார்டிங் என்று சொல்லிவிட்டு சின்ன வீட்டில் ரீ ரிக்கார்டிங் செய்து கொண்டிருக்கிறார் என்பது அரசல்புரசலாக காதில் விழ, கொதித்துப்போனார் மனைவி. வீட்டில் புயல் கிளம்பிய போது, ``என்ன பேத்தல் இது? ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பழகினாலே அது காதலா? அது படுக்கைக்குத்தானா?'' என்று உலகத்தில் உள்ள அனைத்து திருட்டுக் காதலர்களின் மாமுல் டயலாக்கை, தனது நீண்ட குடுமியை அவிழ்த்து முடிந்து கொண்டே சொல்லியிருக்கிறார் இந்த மன்மதராசனும். இவரை இவர் போக்கிலேயே விட்டுப் பிடிக்க வேண்டும் என்று மனைவி காத்திருந்தார். ஒரு நாள் தனக்கு வேண்டியவர்கள் கொடுத்த தகவலின்படி, பாண்டிப் பெண்ணின் மடியில் படுத்து, கனவுக் காட்சியில் மிதந்தவரை கையும் களவுமாகப் பிடிக்க, இரண்டு கறுப்புகளும் மிரண்டு போயின! `உனக்கு நான் வேண்டுமா, அவள் வேண்டுமா என்று முடிவு பண்ணு' என்று மனைவி கேட்க, `எனக்கு நீங்கள் இருவரும் வேண்டும்' என்று இவர் உண்மையை உடைக்க, `அப்படியென்றால் என் பிள்ளைகளை வளர்க்க எனக்குத் தெரியும். நடையைக் கட்டு' என்று கிளம்பிவிட்டார் அந்த `மகாலட்சுமி'. இந்த மனிதனை எப்படியெல்லாம் ஆளாக்கினோம் என்ற பழைய நினைவுகள் அந்த பாசமுள்ள பெண்மணியை வாட்ட, ஒரு நாள் தற்கொலை முயற்சிக்குக் கூட போய் கடைசி நிமிடத்தில் அது தடுக்கப்பட்டிருக்கிறது! இனியும் அந்தத் தாய் கண்ணீர் விடத் தயாராக இல்லை. முகாரியும் சுபபந்துவராளியும் பாடப் போவதில்லை. இப்போது அவர் மனதில் ஒரு வைராக்கியம். ஒரு சபதம். - `ஒழுக்க சீலரான ஏ.ஆர்.ரஹ்மானை மானசீக குருவாக ஏற்று தன் செல்ல மகனை பெரிய மியூஸிக் டைரடாக்கிக் காட்டுவேன்!' - கீ போர்டுடன் மகன் பக்கத்திலேயே இருக்கிறார் அவர்..
[ Back ]

More...
Kodambakkam Sex episodes
Pathikichu - Kumudam Series (Episode 25)
What do we get here ???
Pathikichu - kumudam Series (Episode 24)
Pathikichu - kumudam Series (Episode 23)
Pathikichu - kumudam Series (Episode 22)
Pathikichu - kumudam Series (Episode 21)
Pathikichu - kumudam Series (Episode 20)

Show all blog entries